உடன்பிறப்புக்கள் விலகிச் செல்வதால் வரும் தனிமையும்
உலகமாய் எம்மை சுற்றும் நட்புக்கள் பிரிவதால் வரும் தனிமையும்
காதல் கொண்ட இதயத்தின் மௌனத்தால் வரும் தனிமையும்
துன்பத்தின் போது கடவுள் தன் குழந்தையை
கருணையிலிருந்து தனிமைப்படுத்துகிறாரா
என எண்ணுகையில் வரும் தனிமையும்
கொடியது சாவிலும்...
உயிரை வலிந்து கொல்லும் இத்தனிமையிலும்
உயிரான அன்புடைய இதயங்களை நினைக்கையில்
தனிமை கூட சுகமே...

No comments:
Post a Comment