Saturday, May 5, 2012

செவ்வழகின் தேவதை என்று முழங்கு...

மாலை கதிரவன் உன்மேல் முத்தமிட்டு சென்றானா- அன்றேல்
செவ்வானத்தையே ஆடையாய் பரிசளித்துவிட்டானா???
உன் செவ்வழகை கண்டு
ஆகாயம் தன் அழகு கெட்டுவிட்டதாய் கோபம் கொண்டு
மின்னலாய் உன்மேல் பாய
நீயோ அவ் ஒளிக்கீற்றுகளையும்
கள்ளமாய் திருடிக்கொண்டாய் போலும்...
அதனாலும் கோபம் கொண்ட வானம் மழையை பொலிந்து
உன் செவ்வழகை கரைத்துவிட தயாராகின்றது...
உன் செவ்வழகு கரைவதற்கல்ல...
கவர்வதற்கே...கவர்வதற்கே...
இயற்கையின் வரம் பெற்றேனே
செவ்வழகின் தேவதை என்று முழங்கு...

No comments:

Post a Comment