Saturday, May 5, 2012

உள்ளம் பட்டாம் பூச்சியாய் மாறிவிட...

பூக்கள் கூட உன் போல் மலர்ந்ததில்லை...
வானத்து நட்சத்திரங்கள் கூட உன் போல் கண்சிமிட்டியதில்லை...
தேவதைகள் கூட உன் போல் புன்னகைத்ததில்லை...
உன்னை பார்த்த நிமிடம் முதல்
என் துன்பம் பறந்ததேனோ???
ஆயிரம் ஆயிரம் மொழிகள் இருந்தும்
நீ பேசும் செல்ல மழலை மொழிகளை மட்டும்
புரிந்துகொள்ள முடியவில்லை...
புரியவும் முயற்சிக்கவில்லை...
உன் குறும்பான மழலை மொழி போதும்
உள்ளம் பட்டாம் பூச்சியாய் மாறிவிட...

No comments:

Post a Comment