Saturday, May 5, 2012

அன்பு கொண்ட இதயங்கள் விலகிச் செல்கின்றன

அன்பு கொண்ட இதயங்கள் விலகிச் செல்கின்றன
இங்கோர் இதயம் இருப்பதை மறந்து...
இல்லை... இல்லை...
மரணத்திலும் மறவாத அவ்விதயங்கள்
கால தூதுவனின் நகர்த்தலால் நகர்கின்றன...
விலகிச்சென்று அன்பை பன்மடங்காக்க...

செவ்வழகின் தேவதை என்று முழங்கு...

மாலை கதிரவன் உன்மேல் முத்தமிட்டு சென்றானா- அன்றேல்
செவ்வானத்தையே ஆடையாய் பரிசளித்துவிட்டானா???
உன் செவ்வழகை கண்டு
ஆகாயம் தன் அழகு கெட்டுவிட்டதாய் கோபம் கொண்டு
மின்னலாய் உன்மேல் பாய
நீயோ அவ் ஒளிக்கீற்றுகளையும்
கள்ளமாய் திருடிக்கொண்டாய் போலும்...
அதனாலும் கோபம் கொண்ட வானம் மழையை பொலிந்து
உன் செவ்வழகை கரைத்துவிட தயாராகின்றது...
உன் செவ்வழகு கரைவதற்கல்ல...
கவர்வதற்கே...கவர்வதற்கே...
இயற்கையின் வரம் பெற்றேனே
செவ்வழகின் தேவதை என்று முழங்கு...

உள்ளம் பட்டாம் பூச்சியாய் மாறிவிட...

பூக்கள் கூட உன் போல் மலர்ந்ததில்லை...
வானத்து நட்சத்திரங்கள் கூட உன் போல் கண்சிமிட்டியதில்லை...
தேவதைகள் கூட உன் போல் புன்னகைத்ததில்லை...
உன்னை பார்த்த நிமிடம் முதல்
என் துன்பம் பறந்ததேனோ???
ஆயிரம் ஆயிரம் மொழிகள் இருந்தும்
நீ பேசும் செல்ல மழலை மொழிகளை மட்டும்
புரிந்துகொள்ள முடியவில்லை...
புரியவும் முயற்சிக்கவில்லை...
உன் குறும்பான மழலை மொழி போதும்
உள்ளம் பட்டாம் பூச்சியாய் மாறிவிட...

பூலோக(பூக்களின் உலக) பேரழகி நீ மட்டுமே...

என்னை பார்த்து தலை சாய்ந்தன
என் தோட்டத்து பூக்கள்...
இன்றோ உன் கைகள் என்னை வருடிய போது
உணர்ந்தேன் என்நிலையை...
உன் மென்மையான பேரழகின் முன் என்நிலையை...
தன்மானம் இன்றி வாழ முடியாது...
என் மலர்மேனி உதிரட்டும்...
பூலோக(பூக்களின் உலக) பேரழகி நீ மட்டுமே...