Saturday, November 5, 2011

காதல் கைகூ கவிதைகள்



உன் நினைவுகளால் உருகுமொரு மலர்
உனக்காக ஒரு மலருடன் இங்கே
உன் வரவை எதிர்நோக்கிய வண்ணம்...


என் இதயத்தை உன்னிடம் தந்து விட்டேன்
என்னுடன் பேசாது இருந்து விடாதே...
உன் மௌனம் என் உயிரற்ற உடலைக் கூட
அணுவணுவாய் அழித்துவிடும்...


இனிப்பை தேடினேன் இவ்வுலகெங்கும்
ஈற்றில் அறிந்து கொண்டேன்
அது உன் நினைவுகள் மட்டும் தான் என்று...

3 comments:

  1. இனிப்பை தேடினேன் இவ்வுலகெங்கும்
    ஈற்றில் அறிந்து கொண்டேன்
    அது உன் நினைவுகள் மட்டும் தான் என்று...

    அருமை மேனா. என்ன சொல்வதென்று தெரியவில்லை.படிக்கும் பொழுது எந்த வரி மனதை ஆக்ரமிக்கும் என்று தெரிவதில்லை. திடீரென ஒட்டு மொத்த மனதையும் இந்த வரிகள் ஆக்ரமித்துவிட்டது
    நேரமிருப்பின் எனது வலைத்தளத்தை பார்வையிடவும்
    http://tamilraja-thotil.blogspot.com/

    ReplyDelete
  2. நல்ல கவிதை .வாழ்த்துக்கள்.

    ReplyDelete