உன் நினைவுகளால் உருகுமொரு மலர்
உனக்காக ஒரு மலருடன் இங்கே
உன் வரவை எதிர்நோக்கிய வண்ணம்...
என் இதயத்தை உன்னிடம் தந்து விட்டேன்
என்னுடன் பேசாது இருந்து விடாதே...
உன் மௌனம் என் உயிரற்ற உடலைக் கூட
அணுவணுவாய் அழித்துவிடும்...
இனிப்பை தேடினேன் இவ்வுலகெங்கும்
ஈற்றில் அறிந்து கொண்டேன்
அது உன் நினைவுகள் மட்டும் தான் என்று...