கருணை நாயகமாய்
பட்சிகளுக்கு விடுதலையளிக்கும் முழுமதியே!!!
இங்கு என் இதயம் கட்டுப்பாட்டை இழந்து பறந்துவிட்டது
உன்னைக் கண்டவுடனேயே...
என் இதயத்தை உன் இதயத்தில் வைத்துவிடு
இன்றேல் பறந்துவிட்ட என் இதயம் ஆதரவின்றி துடித்துவிடும்...
ஆரவாரிக்கும் உயிரணுக்கள் கூட சிதைந்துவிடும்...
நிலையற்ற மனித வாழ்வில்
என் இதயத்தை மட்டும் உன்னிடத்தே நிலைபெற செய்வாயா???
பட்சிகளைப் போல நானும் உனை விட்டுச் செல்ல முடியாமல்
உன்னையே சுற்றிவருகிறேன் - ஆனால்
நீயோ உன் கருணையுள்ளத்தால் எனக்கும் விடுதலை தருவதற்கு முயல்கிறாய்...
நானோ என்னுயிரை விட்டு செல்ல முடியாமல் தவிப்பது
புரிகின்றதா அன்றேல் புரியவில்லையா???
முழுமதியே உன் செவ்விதழ்களை அசைத்து பதில் கூறமாட்டாயா???

அழகிய கற்பனை சகோதரி..
ReplyDeleteசகோதரர் மகேந்திரன்...
ReplyDeleteநன்றி உங்கள் கருத்திற்கு...