Wednesday, October 5, 2011

மனித குலமே வாரீரோ!!!



உம்மிடம் என்ன தான் கேட்டேன்
எதற்காக இந்த புன்முறுவல்???
ஓ!!! மனித வாழ்வைப் பார்த்தா
அன்றேல் நல்வாழ்விற்கான வழிப்படுத்தலா???

தினம் தினம் இவ்வுலகில் நடந்தேறும் செயல்களால்
மனித மனம் அடிக்கடி துன்பக்கடலில் மூழ்கிவிடுகிறது தான்...
அதற்காகவா முறுவலிக்கின்றீர்கள்???
ஓ! தன்னம்பிக்கையற்ற மனித வாழ்வைப் பார்த்தா???

ஆமா... ஓரிரு நாட்களிலே முடியும் வாழ்க்கையாயினும் 
எவ்வளவு பூரிப்பு எம் முகத்தில்...
நீங்களோ துன்பத்தில் மூழ்கி 
அத்துன்பக் கடலலையால் உற்றாரையும் அடித்து செல்வீர்களே!
மனித வாழ்வில் கற்றுக்கொண்டது இதுதானா???
இதை விடுத்து உள்ளங்களை உவகை ஊட்டி 
கொள்ளையிடுவதற்காய் 
வாரீரோ மனித குலமே வாரீரோ!!!

No comments:

Post a Comment