Tuesday, August 16, 2011

ஏதேதோ உணர்வலைகளை...



பூங்கையிலொரு பூக்கூடை கொடுத்து
உன்னை தொலைதூர நோக்குடன்
படைத்துவிட்டான் பிரம்மன்
நீயோ உன் விழியம்புகளால் யாரைத் தான்
சாய்த்துவிட முயல்கின்றாயோ???



உன் புன்னகை சிந்திய முகத்தில்
ஏதேதோ உணர்வுகளின் வெளிப்பாடு...
உன் மௌனம் காக்கும் உள்ளம்
நெளிந்து வளைந்த முடிகளுள்
சிக்குண்ட உன் தாமரை முகத்தில்
பிரதிவிம்பமாகின்றதே!!!
இவை என் மனதை
துண்டு துண்டாகக் கிழித்து
ஏதேதோ உணர்வலைகளை...
தோற்றுவிட்டேன் உன்னிடத்தே நான்...

No comments:

Post a Comment