உங்கள் புன்சிரிப்பிற்கு காரணம் தான் எதுவோ???
உலகின் உச்சியிலே இருப்பதனாலா அன்றேல்
உங்கள் எதிரி நிலாவை மென்று ஒளியைப் பெற்றுவிட்டதனாலா???
உங்கள் புன்சிரிப்பால் பூவுலக உள்ளங்கள்
கொள்ளையிடப்பட்டு விட்டன என்ற
புகார் உண்மை தானோ???
ஓ... நீ என்னையும் கொள்ளையிட
ஆயத்தமாகி விட்டாய் போல...
உன்னை உற்றுநோக்கிய என் விழிகள்
ஓரிரு கணப் பொழுதிலேயே
உன்னால் சிறை வைக்கப்பட்டு விட்டன தான்
பிணையில் விடக் கூட மறுக்கின்றாயே...
நான்... நான்... நான்...
மீட்கமுடியாதா என்னை???
ஆ... என்னை மீட்க பூரணநிலாவாக அவதாரம் எடுக்க
துணிந்து விட்டால் என் தேவதை...

No comments:
Post a Comment