சிந்தனைகளும் ஒன்றானது
செயல்களும் ஒன்றானது
நட்பென்ற வலையில் சிக்குண்ட எமக்கு...
அன்பால் உருகிய எம் உள்ளங்கள்
குதூகலமாய் பறக்கவே செய்தன
எல்லைகளற்ற உலகை நோக்கி...
விட்டுக்கொடுப்பும் புரிந்துணர்வும்
எம்மை துரத்தித் துரத்தி ஆட்கொண்டு விட்டன...
உன்னைக் கண்டு ஓரிரு நாட்கள் தான்
ஆகின்றன-என் வாழ்நாளில்
நீயே என் உள்ளத்தை
கொள்ளை கொண்டுவிட்டாய்
உன் குறும்புகளாலும் என் மேல் நீ
கொண்ட உரிமைகளாலும்...
இன்றும் என் மனதில் ஓரிரு சந்தேகங்கள்
என் மனதைக் கண்ணாடி போன்று
உன்னிடம் காட்டிக் கொடுப்பது யாரோ என்பதுதான்
அது, அது... இறைவனா???
இல்லை...இல்லை...இல்லவேயில்லை...
தெளிந்துகொண்டேன்
இது தான் எம் நட்பின் வலிமை என்று.

No comments:
Post a Comment