Sunday, July 24, 2011

காற்றோடு கலந்தன...



காற்றோடு கலந்தன-என்
உதிரத்தால் கலந்த உறவுகளின் வாழ்க்கை.
பயணிக்கின்றது, பயணிக்கின்றது-அது
A9 வழியே பயணிக்கின்றது.
பரந்தன்,கிளிநொச்சி,கொக்காவில்,
மாங்குளம் கடந்தும் பயணிக்கின்றது...


ஆனால், என் மனமோ பிறேக்டவுண் ஆகிவிட்டது.
முயற்சித்துப் பார்த்தேன் மறுத்தது
அது தன் பயணத்தை...
சிறிது நிமிடம் கண்களை மூடினேன்
அங்கே விருந்தோம்பலை இயம்பிய
எம் உறவுகள் புன்னகையுடன்...
மீண்டுமொரு விருந்திற்கு வருமாறு அழைத்தவாறே...
என் மனமோ மகிழ்ச்சியால் பூரித்தது... குளிர்ந்தது...


என் உள்ளத் தொலைக்காட்சியை நிறுத்தினார்
அருகிலிருந்த பயணி ஓமந்தை சோதனைச் சாவடி வந்துவிட்டதைக் கூறிக் கொண்டே...


அந்த நிமிடம் என் மனமோ ஏங்கியது
அந்த உறவுகளையும் அவர்தம் வாழ்வியலையும் எண்ணி
அவற்றைக் கூற என் மனம் துடித்தது-ஆனால்
கேட்பதற்கோ இருந்தது காற்றொன்றே...
எனினும் கூறினேன் என் உறவுகளின் உணர்வுகளை.


அக்காற்று சென்றதோ எவ்விடம் தெரியவில்லை...
எவ்வாறாயினும் அக்காற்று அவர்தம் வாழ்வில்
ஒளியேற்ற மீண்டும் தென்றலாய் வரும் என்ற
நம்பிக்கையில் பயணத்தைத் தொடர்ந்தேன்...

Friday, July 22, 2011

அம்மா...



அம்மா... அம்மா... அம்மா ...
என்று செல்லமாக அழைக்க
என் உயிர் அன்னையும் ஓடோடி வந்திடுவாள்
தன் செல்ல மகளின் சின்னக் குரல் கேட்டே...

அன்னை மடி கிடைத்து விட்டால்
ஆகாரமும் வேண்டாம் எனக்கு,
அமுதும் வேண்டாம் ...
ஆசையாய் படுத்துறங்க
தாய் மடி ஒன்றே போதும்.

உன் நினைப்பு வந்து விட்டால்
ஒரு நொடியும் ஒரு யுகமாகும்...
உன்னை பார்க்க புறப்பட்டால் பயணம் கூட
உள்ளத்தை உருக்குமம்மா...


கல்லூரிக்கு சென்று சில காலம் தான்.
உன் நினைவோ கல்வியைக் கூட
துரத்திவிட முயல்கிறது - ஆனால்
நீயோ என்னை கல்வி அமுதை
மென்று வரச்சொல்லி துரத்துகிறாய்...

என் உள்ளமோ அமைதி அடையாது
உன் நினைவில் உருகுகிறது
நீயும் இதை அறிந்தும் அறியாதவளாய்
உன் செல்ல மகளின் வாழ்விற்காய்
பிரிவுத் துன்பத்திலும் இன்பம் காண்கின்றாய்...

காலை வணக்கமாய்
என்னை துயில்லேழுப்ப வந்திடும் நீ
விடுதி அறை காற்றில்
பாசப்பிணைப்புடனே கலந்திருந்து,
நலம் பல விசாரித்து
ஈற்றில் குட் நைட்,கோட் ப்ளேசஸ் யு சொல்லி
உறங்க வைக்கும் வரை
அன்பாலே உருக்குகின்றாய்.
பின்பும் உன் கனவில் வந்ததாக காலையிலே
உரைக்கின்றாய்...
இதுவெல்லாம் உன் உயிரின் மீது
நீ கொண்ட அன்பின் வெளிப்பாடோ அன்றேல்
அம்மா என்றதன் தாற்பரியமோ???

Wednesday, July 20, 2011

நட்பு



நட்பு என்னும் நன்னூலை
உன் அறியாமையால் நலிவாக்கிவிடாதே
ஏனெனில் நட்பு என்பது
வெறும் வார்த்தையல்ல.
நட்பை உணர்ந்தவன் மூவுலகையும் அனுபவித்தவனே...

உதிரத்தால் ஒன்றல்லத் தான் _ ஆனால்
உதிரத்தால் கலந்த உறவுகள்
உதறிவிட்ட போதும்
உதவிக்கரம் நீட்ட
உயிராய் ஒரு நண்பன் கிடைத்து விட்டால் அதுவே
ஏழு பிறப்பிற்கும் நான் பெற்ற பேறாகும்...

Tuesday, July 19, 2011

இது தான் இறப்பா ...



இறப்பு என்பது உயிர் பிரிவதாக இருக்கலாம்- ஆனால்
பிரியும் உயிர் பிரிந்தே சென்றாலும்
நட்பும் நன்னடத்தையும் தர்மமும்
என்றென்றும் பிரிந்த உயிருடனேயே
உயிர் வாழும் - அது இறப்பா?
இல்லை அது தான் வாழ்வு...